கேரளத்தில் 11,196 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,196பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் மட்டும் 149 பேர் பலியாகியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,196பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் மட்டும் 149 பேர் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கேரளத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 11,196 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 149 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,810-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,849 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 44,59,342 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,49,356 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com