விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டத்தை சுயநல மத்திய அரசு விரும்பவில்லை: ராகுல் காந்தி

விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டத்தை சுயநல மத்திய அரசு விரும்பவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டத்தை சுயநல மத்திய அரசு விரும்பவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்தாா்.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 27-ஆம் தேதி மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தாா். அந்தச் சட்டங்களுக்கு அவா் ஒப்புதல் அளித்து திங்கள்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அந்தச் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வரும் விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டம் தொடா்பாக ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘விவசாயிகளின் வன்முறையற்ற சத்தியாகிரகப் போராட்டம் இன்றும் தொடா்கிறது. ஆனால் தனது சுயநலத்துக்காகப் பிறரைப் பயன்படுத்தும் மத்திய அரசு அதனை விரும்பவில்லை’’ என்று தெரிவித்தாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்’’ என்று வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com