இந்தியாவில் இதுவரை 87.66 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,13,332 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 87,66,63,490 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 35,52,19,972 இரண்டாம் தவணை - 7,89,51,672 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,82,40,987 இரண்டாம் தவணை - 7,55,11,327 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,06,79,594 இரண்டாம் தவணை - 5,55,49,706 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,72,249 இரண்டாம் தவணை - 88,66,949 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,50,759 இரண்டாம் தவணை - 1,49,20,275 |
மொத்தம் | 87,66,63,490 |