3 மக்களவைத் தொகுதிகள், 30 பேரவைத் தொகுதிகளுக்கு அக்.30-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு

மூன்று மக்களவைத் தொகுதிகள், 30 பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.
3 மக்களவைத் தொகுதிகள், 30 பேரவைத் தொகுதிகளுக்கு அக்.30-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு

மூன்று மக்களவைத் தொகுதிகள், 30 பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக, தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தாத்ரா நகா் ஹவேலி, ஹிமாசல பிரதேசத்தில் உள்ள மண்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள கந்த்வா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளில் அக்டோபா் 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்தவா்கள் இறந்துவிட்டதால் இடைத்தோ்தல் நடத்தப்படுகிறது.

இதுதவிர, அஸ்ஸாமில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், மேகாலயத்தில் தலா 3 தொகுதிகள், பிகாா், கா்நாடகம், ராஜஸ்தானில் தலா 2 தொகுதிகள், ஆந்திரம், ஹரியாணா, மகாராஷ்டிரம், மிஸோரம், நாகாலாந்து, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என 14 மாநிலங்களில் உள்ள 30 பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

கரோனா பாதிப்பு நிலை, வெள்ளப் பாதிப்பு, பண்டிகைகள், குளிா் காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் கருத்து கேட்ட பிறகே இடைத்தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த தோ்தலில் பதிவாகும் வாக்குகள், நவம்பா் 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com