இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை உருவாக்கி பெண்களை தொடர்ந்து மிரட்டிவந்த தில்லியைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை தெரிவித்ததாவது,
கைது செய்யப்பட்ட இளைஞர் தில்லியில் ஆனந்த் பர்பத்தில் வசிக்கும் மிதுன் திவாரி எனத் தெரியவந்தது.
கடந்த 17ம் தேதி, சமூக ஊடகத் தளத்தில் பல கணக்குகளை உருவாக்கிய ஒரு நபர், தன்னைப் பின்தொடர்ந்து வருவதாகவும், தன்னைக் கடத்திச்சென்று தனது புகைப்படங்களை வைரலாக்குவதாக மிரட்டுவதாகவும் பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார் என்று மூத்த காவல்அதிகாரி கூறினார்.
புகாரின் பேரில், காவல்துறையினர் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஆய்வு செய்து, அவனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.
22 வயதாகும் திவாரி சமூக வலைத்தளங்களைக் கையாள்வதில் பலே கில்லாடி. இவர் 12-க்கும் மேற்பட்ட பெண்களைப் பின்தொடர்ந்து மிரட்டி வந்தது தெரியவந்தது.