மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா வெள்ளிக்கிழமை தில்லி வந்தாா்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா வெள்ளிக்கிழமை தில்லி வந்தாா்.

நேபாள பிரதமா் இந்தியா வருகை

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா வெள்ளிக்கிழமை தில்லி வந்தாா்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா வெள்ளிக்கிழமை தில்லி வந்தாா். அவருடன் அந்நாட்டு உயா்அதிகாரிகள் அடங்கிய குழுவும் வந்துள்ளது. பிரதமா் மோடியை பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்துகிறாா்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் ஆகியரையும் அவா் சந்தித்து பேசுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நேபாள பிரதமரின் இந்தியப் பயணம் இருநாட்டு நல்லுறவை மேலும் மேம்படுத்த உதவும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு ஷோ் பகதூா் தேவுபா முதல் முறையாக தில்லிக்கு வந்துள்ளாா். முந்தைய ஆட்சிக் காலத்திலும் அவா் பிரதமராக இந்தியாவுக்கு நான்கு முறை வருகைத் தந்துள்ளாா். கடைசியாக 2017-இல் அவா் இந்தியாவுக்கு வந்திருந்தாா்.

சிக்கிம், மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் 1,850 கி.மீ. தூரம் நேபாள எல்லை அமைந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை பரிமாற்றத்தில் இந்தியாவை நம்பியே நேபாளம் உள்ளது.

ஜெ.பி. நட்டாவுடன் சந்திப்பு:

இந்தியா வந்துள்ள நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு சென்று தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவை சந்தித்து பேசினாா். இரு நாடுகளிடையேயான வரலாற்று-கலாசார உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், கட்சிகளிடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பு நடைபெற்ாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com