பல்வேறு சமூக மக்கள் கொண்டாடும் புத்தாண்டு: பிரதமர் வாழ்த்து

நாட்டில் பல்வேறு சமூக மக்களின் புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நாட்டில் பல்வேறு சமூக மக்களின் புத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி, மகாராஷ்டிரத்தில் குடிபத்வா, காஷ்மீரில் 'நவ்ரே', சிந்தி சமூக மக்கள், மணிப்பூர் என நாட்டில் பல சமூக மக்களின் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு அவரவர் தாய்மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்நாளில் மக்கள் நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் பெற வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார். 

மேலும் இந்து பண்டிகையான 'சைத்ர நவராத்திரி' விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. 'நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள். இந்த சக்தி வழிபாட்டு விழா அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலைப் புகுத்தட்டும்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com