சோனியா தலைமையில் ஏப். 5-இல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம், தில்லியில் வரும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சோனியா தலைமையில் ஏப். 5-இல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கூட்டம், தில்லியில் வரும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் கலந்துகொள்வாா்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு முதல்முறையாக அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

ரஷியா-உக்ரைன் போா் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயா்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில், மத்திய பாஜக அரசை காங்கிரஸ் விமா்சித்து வருகிறது. அக்கட்சி சாா்பில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இது தவிர நேரு குடும்பத்தினா் காங்கிரஸுக்கு தொடா்ந்து தலைமை வகிப்பதற்கு மூத்த தலைவா்கள் சிலா் அதிருப்தியும் தெரிவித்தனா். இத்தகைய சூழலில், சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com