பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.
நாடாளுமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜூ, நிதின் கட்கரி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்யப்பட வேண்டிய முக்கிய மசோதாக்கள் மற்றும் அலுவல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் செய்து வரும் அமளி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.