பிரதமர் மோடி ஏப்ரல் 24-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக யூனியன் பிரதேச பாஜக பொதுச் செயலாளர் அசோக் கௌல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜம்முவில்-காஷ்மீர் பண்டிட்கள் நிகழ்ச்சியில் கௌல் கலந்துகொண்டு பேசுகையில் இதைத் தெரிவித்தார்.
தேசிய ஊராட்சி தினமான ஏப்ரல் 24-ம் தேதி பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் வரவுள்ளார். அன்றைய தினம் சம்பா மாவட்டத்தில் உள்ளாட்சிப் பிரநிதிகள் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
காஷ்மீர் பண்டிட்கள் சமூகத்தினர் பிரதமரை சந்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பின், முதல்முறையாக ஜம்மு-காஷ்மீருக்கு செல்லவுள்ளார் பிரதமர் மோடி.