நாட்டில் மேலும் 1,086 பேருக்கு கரோனா

நாட்டில் இன்று மேலும் 1,086 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் 1,086 பேருக்கு கரோனா
நாட்டில் மேலும் 1,086 பேருக்கு கரோனா

நாட்டில் இன்று மேலும் 1,086 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,086 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 11,871ஆக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 71 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா்.

இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு 4,30,30,925ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த உயிரிழப்பு 5,21,487ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1,198 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,24,97,567 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

நாட்டில் இதுவரை 185 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com