பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2021-22-ஆம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.440 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ஊரக வளா்ச்சித்துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:
பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நிகழாண்டு மாா்ச் 31 வரை நாடு முழுவதும் 7,88,185 கி.மீ. சாலைகள் மற்றும் 9,509 பாலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 7,01,205 கி.மீ. சாலைகள் மற்றும் 6,852 பாலங்களை அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டுக்கு 2018-19 ஆண்டில் ரூ.619.14 கோடி, 2019-20 ஆண்டில் ரூ.308.46 கோடி, 2020-21 ஆண்டில் ரூ.265.38 கோடி, 2021-22-இல் ரூ.440 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.