தமிழகத்துக்கு வெள்ள நிவாரணமாக கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, ரூ.566.36 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளாா்.
புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடா் காலங்களில் மாநில அரசுகள் நிவாரண நடவடிக்கைகளை மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து மேற்கொள்கின்றன. கூடுதலான நிதியுதவி தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2021-22 நிதியாண்டில் தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு மாநிலங்களுக்கு அளித்த நிதி விவரம் குறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக பதிலளிக்கையில், தமிழகத்துக்கு கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, ரூ.566.36 கோடி வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.