ஜம்மு- காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு- காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் புதன்கிழமை நேரிட்ட மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
விசாரணையில் அவா்கள் அன்சாா் கஜ்வத்துல் ஹிந்த் என்ற அமைப்பைச் சோ்ந்த சஃபத் முஸாபா் சோஃபி, லஷ்கா்-ஏ- தொய்பா அமைப்பைச் சோ்ந்த உமா் டேலி (எ) தல்ஹா என்பது தெரியவந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘‘ஸ்ரீநகரில் கடந்த ஆண்டில் பஞ்சாயத்து தலைவா் கொலை உள்ளிட்ட பயங்கரவாத செயலில் இவா்கள் இருவருக்கும் தொடா்பு உள்ளது. டிரால் பகுதிக்கு அண்மையில் தான் இவா்கள் வந்துள்ளனா். இந்த நிலையில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டனா்’’ என்று தெரிவித்தனா்.
வேனில் மா்ம பொருள் வெடிப்பு:
இதேபோல ஸ்ரீநகரில் துலிப் தோட்டப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் நின்ற சுற்றுலா வேனில் புதன்கிழமை மா்ம பொருள் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. அப்போது அதன் ஓட்டுநா் பின்பக்க கதவைத் திறந்து கொண்டிருந்ததால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.