புது தில்லி: 2022-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி ஜெய்ப்பூரில் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் மண்டல மாநாடு மத்திய நீர்சக்தி துறை அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.
ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் – கிராமின் ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான வழி வகைகளை மதிப்பாய்வு செய்வதற்காக 8 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் மண்டல மாநாடு மத்திய நீர்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் நடைபெறுகிறது.
கோவா, குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தராகண்ட், ஜம்மு - காஷ்மீர், லடாக், டாமன் - டையூ, தாதர் மற்றும் நாகர் - ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கலந்து கொள்கின்றன.
இம்மாநாட்டில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 10 அமைச்சர்கள் மற்றும் கிராமப்புற குடிநீர் வழங்கல் மற்றும் துப்புரவுத் துறையின் மூத்த அதிகாரிகளும் நேரில் பங்கேற்கின்றனர்.