ஆந்திரத்தில், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் போலீஸ் உளவாளி என்று சந்தேகித்து முன்னாள் ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரியை மாவோயிஸ்டுகள் கொன்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் கூறுகையில்,
உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர் கொற்ற லக்ஷ்மன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அல்லூரி சீதா ராம ராஜு மாவட்டத்தில் உள்ள பெத்தபயலு மண்டலத்தின் போங்கஜங்கி தொலைதூர கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
லக்ஷமன் மாவோயிஸ்ட் அனுதாபியாக வேலைசெய்து வந்தார். ஆனால் அவர் குழுவிலிருந்து வெளியேறி காவல்துறையினரிடம் சரணடைந்தார். அவர் போலீஸ் உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் மாவோயிஸ்டுகள் நேற்று அவரைக் கொன்றனர்.
இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.