பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு: மக்களவையில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தின் 2022 }ஆம் ஆண்டின் நிதிநிலை கூட்டத்தொடர் வியாழக்கிழமை நிறைவடைந்தது. 
பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு: மக்களவையில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம்

புது தில்லி: நாடாளுமன்றத்தின் 2022 }ஆம் ஆண்டின் நிதிநிலை கூட்டத்தொடர் வியாழக்கிழமை நிறைவடைந்தது. 

17}ஆவது மக்களவையின் 8}ஆவது கூட்டத் தொடரான இந்த அமர்வு, கடந்த ஜனவரி 31}ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதில், முதல் அமர்வு பிப்ரவரி 11} ஆம் தேதி வரை 10 நாள்களும், இரண்டாவது அமர்வு மார்ச் 14} இல் தொடங்கி 17 நாள்களும் நடைபெற்றது. ஆனால், கூட்டத் தொடர் ஒரு நாள் முன்னதாக நிறைவு பெற்றது. 2022}2023 நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி 1}இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் மீதான பொது விவாதம் முதல்கட்ட அமர்வில் மொத்தம் 15 மணி 35 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த அமர்வில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 

மாநிலங்களவையில் மொத்தம் 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 6 நிதி ஒதுக்கீடு மற்றும் நிதி மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 2022}ஆம் ஆண்டுக்கான பேரழிவு ஆயுதங்கள் விநியோக (சட்டவிரோத நடவடிக்கை தடை) திருத்த மசோதா, வியாழக்கிழமை அவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com