மாணவா்கள் படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் படிப்பை முடித்த மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக புகாா்கள் வருகின்றன. இந்த தாமதம், மாணவா்களின் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, மாணவா்கள் படிப்பை முடித்த 180 நாள்களுக்குள், அதாவது 6 மாதங்களுக்குள் பட்டங்களை பல்கலைக்கழகங்கள் வழங்கிட வேண்டும். அவ்வாறு வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது மானியக்குழுவின் சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.