மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளம் மாநிலம் கண்ணூரில் உள்ள சி.எச். கணாரன் நகரில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 23 ஆவது அகில இந்திய மாநாட்டில் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மத்தியக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டுள்ள கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது புரட்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.