பஞ்சாப் மாநில காங்கிரஸின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு திங்கள்கிழமை முடக்கப்பட்டுள்ளது.
முடக்கப்பட்ட டிவிட்டர் கணக்கிலிருந்து ஒரு மணிநேரத்தில் நூற்றுக்கும் அதிகமானோரை டேக் செய்து பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, சைபர் பிரிவு காவல்துறையினர் டிவிட்டர் கணக்கை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரத்தில் உத்தரப் பிரதேசம் முதல்வர் அலுவலகம், இந்திய வானிலை மையம் மற்றும் யுஜிசியின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.