புத்தாண்டு பண்டிகையான விஷு திருநாளை கேரள மக்கள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள மக்களும் இதனைக் கொண்டாடுகின்றனர்.
விஷு பண்டிகையையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆடம்பரமும் வளமும் கொண்ட ஒரு புதிய விடியலின் கனவுகளை விஷு நமக்கு அளிக்கும். நாட்டின் அனைத்து வகையான நலனையும் வளர்ச்சியையும் உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைவோம். அனைவருக்கும் விஷூ நல்வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.