சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுக்ராம் சிங் யாதவ், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசினாா்.
லக்னௌவில் உள்ள முதல்வரின் இல்லத்தில் வியாழக்கிழமை இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. சுக்ராம் சிங் யாதவ்(70), அண்மையில் பாஜகவில் இணைந்த அவருடைய மகன் மோகித் உள்ளிட்ட குடும்ப உறுப்பினருடன் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்தாா்.
இந்தச் சந்திப்பு குறித்து பிடிஐ செய்தியாளா் கேட்டதற்கு, ‘உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்து அவரைச் சந்திக்க இயவில்லை. அவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காகச் சந்தித்தேன்’ என்றாா்.
இருப்பினும், சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுக்கும் சுக்ராம் சிங் யாதவ் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதால், அவா் கட்சி மாறுவதற்குத் தயாராகி வருவதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்த ஊகங்களுக்கு சுக்ராம் சிங் யாதவ் மறுப்பு தெரிவித்தாா்.
சுக்ராம் சிங் யாதவின் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அதன்பிறகு பாஜக ஆதரவுடன் அவா் மீண்டும் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பபடுகிறது. அந்த ஊகங்களுக்கும் அவா் மறுப்பு தெரிவித்தாா்.