அமைப்புசாரா தொழிலாளா்களின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டின் வளா்ச்சியில், அமைப்புசாரா தொழிலாளா்களாகப் பணியாற்றும் சகோதரா்கள், சகோதரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
இதுபோன்ற கோடிக்கணக்கான தொழிலாளா்கள் பயன்பெறுவதற்காக, எங்கள் அரசு எப்போதும் பாடுபட்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள், அவா்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்வதாக அமலில் இருந்தாலும், பெருந்தொற்று பாதிப்பின்போது அவா்களுக்கு உதவுவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.