தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தளபதி ஆஷிக் அகமது நீங்ரோவை மத்திய அரசு இன்று (திங்கள்கிழமை) பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் அவர் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கும், பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டுவதற்கும் ஆஷிக் அகமது நீங்ரோ காரணமாக இருந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனவே, நாட்டின் பாதுகாப்புக்காகவும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்காகவும் அவர் பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.