மேற்கு காபூலில் உள்ள பள்ளிகளுக்கு அருகே நிகழ்த்தப்பட்ட இரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
காபூலில் உள்ள மும்தாஜ் பள்ளிக்கு அருகே முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகரின் தாஷ்ட்-இ-பார்ச்சி மாவட்டத்தில் உள்ள மற்றொரு பள்ளி அருகே இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, அப்பகுதியில் மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.