காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார். 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார். 

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினர். 

தில்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தின் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது. 2024 பொதுத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகிய இருவரும் சோனியா காந்தியை நேற்று சந்தித்துப் பேசினர். 

மேலும், 2024 நாடளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரிடம் சோனியா காந்தி அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com