சத்தீஸ்கர் மாநிலத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டம் கைராகர் சாலையில் உள்ள சிங்கர்பூர் அருகே நள்ளிரவு 2 மணியளவில் பயங்கரமான விபத்து ஏற்படுத்திள்ளது.
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு தடுப்பின் மீது மோதி பின்னர் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிருடன் எரிந்து பலியாகியுள்ளனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.