புது தில்லி: தில்லி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் அபிஷேக் தத், தனது எஸ்யுவி காரை திருடுப்போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புது தில்லியில், ஜாங்புரா விரிவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது தனது வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார், வெள்ளிக்கிழமை காலை திருடுப்போனதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. மரியுபோலில் புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்
இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை நிற டோயடோ ஃபர்சூனர் கார், ஹரியாணாவின் பதிவெண் கொண்டது இன்று காலை காணாமல் போயிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கார் திருடுப்போனது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளில் பதிவான விடியோவைக் கொண்டு குற்றவாளியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.