தில்லியில் அமைந்துள்ள ரோஹிணி நீதிமன்றத்தில் இன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
தில்லியின் முக்கிய நீதிமன்றங்களில் ஒன்றான ரோஹிணி நீதிமன்றத்தின் நுழைவுப் பகுதியில் வழக்கறிஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாதுகாப்புக் காவலர் தீடிரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இருப்பினும், யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ரோஹிணி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெடிகுண்டு வெடித்ததும் அதற்கும் முன்பாக துப்பாக்கிச் சூடு நடந்ததும் குறிப்பிடத்தக்கது.