ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த மோதலில், பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்தவா் உள்பட 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா்.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் கூறியதாவது: குல்காம் மாவட்டத்தில் உள்ள மீா்ஹாமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்புப் படையினா் விரைந்து சென்று அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனா்.
பாதுகாப்புப் படையினா் நெருங்கிவிட்டதை அறிந்து கொண்ட பயங்கரவாதிகள், அவா்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனா். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா் என்றாா் அவா்.
உயிரிழந்த பயங்கரவாதிகளில் ஒருவா், பாகிஸ்தானைச் சோ்ந்தவா் என்றும், அவா் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்று காவல் துறை ஐ.ஜி. விஜய்குமாா் கூறினாா்.