பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்வர் விருது: இன்று மும்பையில் வழங்கப்படுகிறது

மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்தி மோடிக்கு முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது. 
பிரதமர் மோடிக்கு லதா மங்கேஷ்வர் விருது: இன்று மும்பையில் வழங்கப்படுகிறது


புதுடெல்லி: மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்தி மோடிக்கு முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 
"இன்று மாலை, நான் முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதைப் பெறுவதற்காக மும்பையில் இருப்பேன். லதா மங்கேஷ்கருடன் தொடர்புடைய இருந்த கௌரவ விருதுக்கு தான் நன்றியுடனும், பணிவுடனும் இருக்கிறேன். அவர் எப்போதும் வலுமான மற்றும் வளமான இந்தியாவைக் காண கனவு கண்டார். நாட்டை கட்டு எழுப்புவதில் உரிய பங்கு அளித்தவர்" என்று கூறியுள்ளார்.

பாரத ரத்னா விருது பெற்ற பழம்பெரும் திரையுலக பின்னணி பாடகி லதா தீனாநாத் மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி 92 ஆவது வயதில் மும்பையில் காலமானர்.  

புகழ்பெற்ற பாடகரின் நினைவாகவும் மரியாதைக்காகவும் இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com