தில்லி கட்டட விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் உயிருடன் மீட்பு

தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 
தில்லி கட்டட விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் உயிருடன் மீட்பு

தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 

தில்லியின் சத்யநிகேதன் பகுதியில் இன்று பிற்பகல் 1.25 மணிக்கு திடீரென கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. 

சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த மூன்று மாடிக் கட்டடத்தில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

கடந்த 5 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு ஐந்து பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

இடிபாடுகளில் மேலும் சிகியுள்ளனரா என்று அப்பகுதியில் தேடும் பணி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com