ஜம்மு-காஷ்மீரின், பாரமுல்லாவில் உள்ள பட்டான் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் இந்திய ராணுவம் இன்று கைது செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
பாரமுல்லா போலீஸ், 29 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (ஆர்ஆர்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில், ஹன்சிவியூரா பாலா பட்டான் பாரமுல்லா சாலையில் வாகன சோதனைச் சாவடி நிறுவப்பட்டது. ஹன்சிவியூரா பட்டானில் இரண்டு பயங்கரவாதிகள் நடமாடுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அக்கிப் முகமது மிர் (27), டேனிஷ் அஹ் தார் (25) (சோபூரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, 2 ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
அவர்களிடம் இருந்து 2 சீன கைத்துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், 10 வெடிமருந்து துப்பாக்கிகள் மற்றும் 2 சீன கைக்குண்டுகளை ராணுவம் கைப்பற்றியுள்ளது.