புவனேஸ்வரம்: ஒடிசாவில் கடுமையான வெப்பம் தகிப்பதால், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்
இந்தத் தகவலை பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவுவதால், ஏப்ரல் 30ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஏற்கனவே தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால், அவை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.