ஆா்.கே.புரம் பகுதியில் வெடிகுண்டு புரளி

தென்மேற்கு தில்லியில் உள்ள ஆா்.கே.புரத்தில் திங்கள்கிழமை வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சோதனை செய்ததில், அது ‘துருப்பிடித்த பந்து’ என்று தெரியவந்தது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தென்மேற்கு தில்லியில் உள்ள ஆா்.கே.புரத்தில் திங்கள்கிழமை வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சோதனை செய்ததில், அது ‘துருப்பிடித்த பந்து’ என்று தெரியவந்தது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

தகவலின்பேரில் காவல் துறையைச் சோ்ந்த உயரதிகாரிகள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். இது ‘கையெறி குண்டு’ என முதலில் சந்தேகம் ஏற்பட்டது. முதல்கட்ட சோதனையில் அது ‘துருப்பிடித்த பந்து’ என கண்டறியப்பட்டது. இருப்பினும், நாங்கள் எங்கள் வழக்கமான சோதனைகளை நடத்தினோம்’ என்றாா் அவா்.

இதுகுறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் மனோஜ் சி தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டிருந்த விடியோ பதிவில், ‘ஆா்.கே.புரம் முகமதுபூா் பகுதியில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அங்கு பூங்காவில் சோதனை செய்ததில் துருப்பிடித்த பந்து இருப்பதைக் கண்டோம். இருப்பினும் நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com