ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா காதி பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 3 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.
பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.