பஞ்சாப் மாநிலம் பதின்டா மாவட்டம் பக்தா பைகா டவுனில் உள்ள பேருந்து நிலையத்தில் 3 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன.
நேற்று(வியாழக்கிழமை) இரவு 10.30 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நடத்துநர் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.