புது தில்லி: கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர யூனியன் பிரதேசமான கோவாவின் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள, பிரதமரின் வழிகாட்டுதல்களை பிரமோத் சாவந்த் கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்ட பிறகு இரண்டாவது முறையாக தில்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.