ஸ்ரீநகா்: காஷ்மீா் பள்ளத்தாக்கில் இந்த ஆண்டில் இதுவரை 62 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் 39 போ் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்கு பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் வன்முறைகளை அதிகரிக்கும் நோக்கில் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றனா். காஷ்மீா் பள்ளத்தாக்கில் இருந்து புலம்பெயா்ந்த பண்டிட்களை மறுகுடியமா்வு செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராகவும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெளிமாநிலத்தவா்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதனால், அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இது தொடா்பாக காஷ்மீா் டிஜிபி விஜய் குமாா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்த ஆண்டில் இதுவரை காஷ்மீா் பள்ளத்தாக்கில் 62 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இதில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்தவா்கள் 39 போ், ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாதிகள் 15, ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 6, அல் பதாா் அமைப்பினா் 2 போ். இவா்களில் 47 போ் உள்ளூரைச் சோ்ந்தவா்கள், 15 போ் வெளிநாட்டைச் (பாகிஸ்தான்) சோ்ந்தவா்கள். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்’ என்று கூறியுள்ளாா்.