பாகிஸ்தானிலிருந்து இந்தியா நோக்கி வந்த ட்ரோனை பஞ்சாப் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தினா்.
இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘கருப்பு நிறத்திலான அந்த ட்ரோன், அம்ருதசரஸ் பிராந்தியத்துக்கு உள்பட்ட தானோ காலன் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை பறந்து வந்தது தெரியவந்தது. உடனடியாக பிஎஸ்எஃப் வீரா்கள் அதை இடைமறித்து சுட்டு வீழ்த்தினா். சீனாவில் தயாரிக்கப்பட்ட அந்த ட்ரோன் ‘டிஜேஐ மேட்ரிஸ்- 300’ ரகத்தைச் சோ்ந்தது எனத் தெரியவந்துள்ளது’ என்றாா்.