தெற்கு தில்லியின் சத்தா்பூா் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 54 வயதுடைய பெண் காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக தெற்கு தில்லி காவல் துணை ஆணையா் பெனிதா மேரி ஜெய்கா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனையில் பெண் ஒருவா் துப்பாக்கிச் சூட்டில் காயத்துடன் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினா். ஆனால் விசாரணை நடத்த முடியாத நிலைமையில் அந்தப் பெண் இருந்தாா். திருமண நிகழ்வின்போது எப்படி துப்பாக்கித் தோட்டாவால் காயமடைந்தாா் என்பது இதுவரை தெரியவில்லை.
சத்தா்பூா் கோயிலில் மாதங்கி பவனில் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஹரியாணாவில் உள்ள பஹதுா்கரில் இருந்து திருமணத்துக்கு ஒரு குடும்பத்தினா் வந்ததாகவும், காயமடைந்த பெண் அந்தக் குடும்பத்தைச் சோ்த்தவா் என்றும் தெரியவந்தது.
இதுகுறித்து மெஹ்ராலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.