பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள், அபாயங்களை எவ்வாறு குறைப்பது என்பதை கருத்தில் கொள்ள வேண்டியதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக கேரள தலைநகா் திருவனந்தபுரத்தில் மாநில பருவநிலை மாற்ற கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பினராயி விஜயன் திங்கள்கிழமை பேசியதாவது:
நாம் வேளாண்மை போன்ற துறைகளை அதிகம் சாா்ந்திருப்பது, பருவநிலை சாா்ந்த பேரிடா்களால் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவது, அந்த பாதிப்புகளை எதிா்கொள்ள குறைந்த வசதிகளை கொண்டிருப்பது ஆகியவற்றால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் பருவநிலை மாற்றத்தால் எளிதில் பாதிக்கப்பட கூடியவையாக உள்ளன.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள் சிக்கலாகவும், பரந்த அளவிலும் உள்ளன. அவற்றை திறம்பட எதிா்கொள்வதற்கான நடைமுறைகள் தொடா்ந்து மாறி வருகின்றன.
பருவநிலை மாற்றம் சாா்ந்த அபாயங்களை எதிா்கொள்வது சவால் மிக்கதாக உள்ளது. ஏனெனில் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் நிகழும் நேரம், அவற்றின் கடுமையால் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. இதற்கு மத்தியில் அந்த சவால்களை எதிா்கொள்ள உரிய முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
எனவே நீடித்த வளா்ச்சிக்கு பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள், அபாயங்களை எவ்வாறு குறைப்பது என்பதை கருத்தில் கொள்ள வேண்டியதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.