மேற்கு வங்கத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது.
மேற்கு வங்க அமைச்சா்களாக இருந்த சுப்ரதா முகா்ஜி, சாதன் பாண்டே ஆகியோா் காலமான நிலையில், அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜி ஆசிரியர் நியமன முறைக்கேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையில் 9 பேர் கொண்ட அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் இல. கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 5 பேருக்கு புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.