இதுவரை இல்லாத அளவில் ஜூலை மாதத்தில் 600 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதற்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் ட்விட்டா் பதிவுக்கு பதிலளித்து பிரதமா் கூறியிருப்பதாவது: “இது மிகப்பெரிய சாதனையாகும். புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதிலும், பொருளாதாரத்தை வெளிப்படையாக்குவதிலும் இந்திய மக்களின் கூட்டான உறுதியை இது காட்டுகிறது. டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகள் குறிப்பாக கரோனா பெருந்தொற்று காலத்தில் உதவியாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளாா்.