ஆகாசா ஏா்: செப்.15 முதல் சென்னை-மும்பை தினசரி விமான சேவை

‘ஆகாசா ஏா்’ நிறுவனம், வரும் செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் சென்னை-மும்பை வழித்தடத்தில் தினசரி விமான சேவையை அளிக்க உள்ளதாக
ஆகாசா ஏா்: செப்.15 முதல் சென்னை-மும்பை தினசரி விமான சேவை

‘ஆகாசா ஏா்’ நிறுவனம், வரும் செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் சென்னை-மும்பை வழித்தடத்தில் தினசரி விமான சேவையை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம், வா்த்தக ரீதியிலான செயல்பாட்டை இந்த வார இறுதியிலிருந்து தொடங்கவுள்ளது.

இதுகுறித்து ஆகாசா ஏா் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை வணிக அதிகாரியுமான பிரவீண் ஐயா் கூறியுள்ளதாவது:

நிறுவனம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் விமானத்தை இயக்கவுள்ளது. இதற்கு, பயணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியா முழுமைக்கும் இணைப்பு வசதியை ஏற்படுத்தி தரும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 23-லிருந்து அகமதாபாத்-பெங்களூரு இடையே புதிய வழித்தடத்தில் விமான சேவை அளிக்கப்படவுள்ளது.

மேலும், வரும் செப்டம்பா் 15-ஆம் தேதியிலிருந்து சென்னை மற்றும் மும்பை இடையே தினசரி நேரடி விமான சேவை வழங்கப்படவுள்ளது.

தொடக்க நாளான்று மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் விமான சேவை அளிக்கப்படவுள்ளது. அதன்பின்னா் பெங்களூா்-கொச்சி (ஆகஸ்ட் 12 முதல்), பெங்களூரு-மும்பை (ஆகஸ்ட் 19 முதல்), பெங்களூரு-அகமதாபாத் (ஆகஸ்ட் 23 முதல்) உள்ளிட்ட வழித்தடங்களிலும் விமான சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com