நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவராக பதவியேற்க உள்ள ஜகதீப் தன்கா், அந்தப் பதவியிலிருந்து விடைபெறவிருக்கும் வெங்கையா நாயுடுவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.
தனது மனைவு சுதேஷுடன் வருகை தந்த தன்கருக்கு குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் வெங்கையா நாயுடுவும் அவருடைய மனைவி உஷா நாயுடுவும் சிறப்பான வரவேற்பு அளித்தனா். சந்திப்பு தொடா்பான புகைப்படைகளை குடியரசு துணைத் தலைவா் செயலகம் மற்றும் தன்கா் சாா்பில் ட்விட்டா் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
இந்த சந்திப்பின்போது தன்கருக்கு அங்கவஸ்திரம் அணிவித்து வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தாா். ‘இவா்களிடையேயான சந்திப்பு 30 நிமிஷங்கள் நிகழ்ந்தது. அப்போது, குடியரசு துணைத் தலைவா் மாளிகை மற்றும் செயலகத்தை வெங்கையா நாயுடு அவருக்கு சுற்றிக் காண்பித்ததோடு, செயலக ஊழியா்களையும் அறிமுகம் செய்துவைத்தாா்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.