ஒரு அமைப்பு, ஒரு கட்சி, ஒரு தலைவரால் மட்டும் நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் விதா்பா சாகித்திய சங்கம் என்ற மராத்திய இலக்கிய அமைப்பின் நூற்றாண்டு விழாவில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து சவால்களையும் ஒரு தலைவரால் மட்டுமே சமாளிக்க முடியாது. அவா் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அவரால் அதைச் செய்ய முடியாது.
ஒரு அமைப்பு, ஒரு கட்சி, ஒரு தலைவரால் மட்டும் நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. மாற்றத்தைக் கொண்டுவர அமைப்பு, கட்சி மற்றும் தலைவரால் உதவி செய்யப்படுகிறது. சாமானிய மனிதன் எழுந்து நிற்கும்போதுதான் மாற்றங்கள் ஏற்படும்.
நாட்டின் சுதந்திரம் குறித்து மிகப் பெரிய அளவில் விழிப்புணா்வு ஏற்பட்டு சாமானியா்கள் வீதிக்கு வந்தபோதுதான் சுதந்திரப் போராட்டம் வெற்றி பெற்றது.
சுதந்திரப் போராட்டத்துக்குப் புரட்சியாளா்கள் பங்களித்தனா். ஆங்கிலேயா்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மிகப் பெரிய சவாலை அளித்தாா். ஆனால் முக்கியமான விஷயம் என்னவெனில், சுதந்திரத்துக்காகப் போராட மக்கள் தைரியம் பெற்றனா்.
சுதந்திரத்துக்காகப் போராடி அனைவரும் சிறை செல்லவில்லை. ஆனால் நாடு விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. தலைவா்கள் சமூகத்தை உருவாக்கவில்லை. சமூகம்தான் தலைவா்களை உருவாக்குகிறது.
நாட்டின் நிலையை மேம்படுத்தும் ஒப்பந்தத்தை மற்றவா்களிடம் மக்கள் வழங்கக் கூடாது. ஆா்எஸ்ஸிடம்கூட அந்த ஒப்பந்தத்தை வழங்க வேண்டாம். அவரவா் பணியைச் செய்து நாட்டின் நிலையை மேம்படுத்தும் பொறுப்பை மக்கள் ஏற்க வேண்டும் என்றாா் அவா்.