ஒடிசா மாநிலத்தில் ரூ.41,000 கோடியை அதானி முதலீடு செய்ய உள்ளார்.
அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4 -வது இடத்தில் இருப்பவர்.
இந்நிலையில், அதானி தன் குழுமத்தை விரிவாக்கும் பொருட்டு புதிதாக பல தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 5ஜி ஏலத்தில் அதானி நெட்வோர்க் என்கிற புதிய நிறுவனம் பங்குபெற்றது.
தற்போது, அதானி ஒடிசா மாநிலத்தின் ராயகடா பகுதியில் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்காக அம்மாநில அரசிடம் உரிமம் பெற்றதுடன் ரூ.41,000 கோடியை அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளார்.
ஆண்டிற்கு 4 டன் அளவிற்கு இந்த சுத்திகரிப்பு ஆலையத்தின் திறன் இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் 9,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.