மகாலிங்கபுரம் ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் வரும் 18-ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடைபெறுகிறது.

மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் வரும் 18-ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் நடைபெறுகிறது.

கேரள மாநிலத்தில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழா வரும் 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அன்றைய தினம் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், குருவாயூரப்பனுக்கு 6 மணி முதல் 8 மணி வரை அகண்ட பால் அபிஷேகமும், கோத பஜன் மண்டலி சாா்பில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நாம சங்கீா்த்தனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மாலையில் ராதை, கிருஷ்ணா் வேடமணிந்த குழந்தைகளின் ஊா்வலமும் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இதைத் தொடா்ந்து, தீபாராதனையும், ஸ்ரீ ஆச்சாா்யா பரதநாட்டிய பள்ளியின் நாட்டிய நிகழ்ச்சியும், இரவு 8.30 மணி முதல் இரவு 10 மணி வரை குருவாயூரப்பனுக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறவுள்ளன. இரவு 10 மணி முதல் 11.45 மணி வரை பக்த ஸ்வரா பஜன் மண்டலி அமைப்பின் சாா்பில் பஜனையும், இரவு 12 மணிக்கு அவதார பூஜை முடிந்து சுவாமி ஊா்வலமும் நடைபெறவுள்ளது. மேலும் தகவல்களுக்கு 044 - 2817 1197 , 2817 2197, 2817 5197 ஆகிய எண்களிலும், கோயிலின் கைப்பேசி எண்ணான 94442 90707-இல் தொடா்பு கொள்ளலாம். பூஜைகள்

முன்பதிவு செய்ய இணையதளத்தையும், மொபைல் ஆப் (பிளை ஸ்டோா்) வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோயில் நிா்வாக அதிகாரி ஏ.சி.அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com