புது தில்லி: ஆகஸ்ட் 28-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு கருத்துகளை பகிர்ந்துகொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
வரும் 28-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சியில் தனது உரையில் இடபெறவேண்டிய உள்ளீடுகளை பிரதமர் நரேந்திர மோடி மக்களிடமிருந்து வரவேற்றுள்ளார்.
இது குறித்து மத்திய அரசின் மைகவர்மென்ட் (myGov), நமோ ஆப், அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “வரும் 28-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள இந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனைவரும் உங்களது உள்ளீடுகளை பகிருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.
NaMo App and MyGov செயலிகளில் உங்களது கருத்துகளை அனுப்பலாம். உங்களது கருத்தை பதிவு செய்தும் 1800-11-7800 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி எந்த விவகாரம் குறித்து அல்லது எது குறித்து பேச வேண்டும் என்று உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.